states

img

அமர்நாத் மேக வெடிப்பு பலி 15 ஆக உயர்வு!

ஜம்மு-காஷ்மீர், ஜூலை 9- அமர்நாத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.  ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள பால்டால் அருகே அமர்நாத் குகை அருகில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி யளவில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்ட தால் பெருவெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 25 கூடாரங்கள் மற்றும் சமையலறைகள் நாச மாகின. இதையடுத்து அமர்நாத் யாத்திரை யில் ஈடுபட்டிருந்த பலர் அதில் சிக்கினர். பேரிடர் மீட்புப் படையினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அமர்நாத் புனித குகையில் சிக்கியுள்ள வர்களை மீட்கும் பணி நடைபெற்று வரு கிறது. இதில் இதுவரை 15 பேர் உயிரி ழந்துள்ளனர். இவர்களில் ஏழு பேர் பெண்  கள். 30 முதல் 40 பேரைக் காணவில்லை  என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை காலை 10 மணி வரை ஆறு  பேர் மட்டுமே மீட்கப்பட்டு நிலக்ரர் விமான தளத்தில் உள்ள ராணுவ மருத்துவ முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பால்டால் பகுதியில் 60 யாத்ரீகர்கள் தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சனிக்கிழமை காலையும் மோசமான வானிலை மற்றும் தொடர்ந்து மழை பெய்தது.  மழையைப் பொருட்படுத்தாமல் மீட்புப்படை யினர் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்த வர்களை மீட்டனர். காணாமல் போனவர் களைக் கண்டறியும் பணியில் மோப்ப நாய்  களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. திடீர் வெள்ளத்தால் சிக்கித் தவித்த  15,000 யாத்ரீகர்கள் பஞ்சதர்னி பகுதி யிலுள்ள முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப்படை (ஐடிபிபி) செய்தித் தொடர்பாளர் சனிக் கிழமை தெரிவித்தார். மேகவெடிப்பு வெள்ளிக்கிழமை மாலை  நிகழ்ந்தநிலையில் அன்று காலை 6,100க்கும் மேற்பட்ட அமர்நாத் யாத்ரீகர்கள் அடங்கிய பத்தாவது குழு தெற்கு காஷ்மீர் இமய மலையில் உள்ள 3,880 மீட்டர் உயரமுள்ள அமர்நாத்தின் குகைக் கோவிலுக்கு புறப் பட்டுச் சென்றுள்ளது.  தெலுங்கானா பாஜக சட்டமன்ற உறுப்பி னர் ராஜா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர்  அமர்நாத் குகையில் மேக வெடிப்பில் இருந்து தப்பினர். ஹெலிகாப்டர் மூலம் அமர்  நாத் சென்ற அவர் அங்கிருந்து குதிரைவண்டி கள் மூலம் திரும்பி வந்து கொண்டிருக்கி றார். மேகவெடிப்பு காரணமாக அமர்நாத்  யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளது. 

மற்றொரு மேக வெடிப்பு

இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரின் தோடா  மாவட்டத்தில் தத்ரி நகரில் குந்தி மலைப்பகு தியில் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி  அளவில் மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் பெருமழை கொட்டியது. இதில், நெடுஞ் சாலையில் சேற்றில் வாகனங்கள் சிக்கிக்  கொண்டன. இதனால் வாகன போக்கு வரத்தில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு சாலை சீரமைப்புப் பணி கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங் கள் இயங்கி வருகின்றன. இந்தத் தகவலை தோடா காவல்துறை கண்காணிப்பாளர் அப்  துல் கயூம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம்

அமர்நாத்தில் மேக வெடிப்பு நிகழ்ந்துள் ளதை அடுத்து கர்நாடக அரசு தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 250 பேர் அமர்நாத் பயணம் மேற் கொண்டுள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் அவர்கள் இருக்கக்கூடும். யாத்ரீகர்கள் ராம்நகரம், பெங்களூரு நகர், பெங்களூரு புற நகர், சிக்கபல்லாபுரா, மைசூரு, மாண்டியா,  ஷிவமொக்கா மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று  கர்நடாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் மனோஜ் ராஜன் சனிக்கிழமை யன்று தெரிவித்துள்ளார்.